இலங்கைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க "பல்லாஜியோ கொழும்பு" முதன்மையான விளையாட்டு அரங்கம்


ஸ்ரீலங்கா ஓர் வேகமாக வளர்ந்துவரும் நாடு. இது இந்தியர்களால் மட்டுமல்ல, உலகிலுள்ள அனைத்து சுற்றுலாப் பயணிகளாலும் மிகவும் விரும்பப்படும் ஓர் பயண இலக்கு நாடு ஆகும்.

ஸ்ரீலங்கன் விமானச் சேவை மற்றும் தி கிங்ஸ்பரி ஹோட்டல் ஆகியவற்றுடன் இணைந்து தற்போது ‘பல்லாஜியோ கேசினோ கொழும்பு’ எனும் இரவு கொண்டாட்ட நிகழ்ச்சி ஆகஸ்ட் 5 ஆம் தேதியன்று கோவையிலுள்ள தி லி மெரிடியன் ஹோட்டலில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஆடல், பாடல் நிகழ்ச்சியை தென்னகத் திரை நட்சத்திரம் “செல்வி ரகசியா”, தனது மும்பை நடனக் குழுவினருடன் இணைந்து நடத்தினார். 



‘பல்லாஜியோ கொழும்பு’ கொழும்பு நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு தரப்படும் வசதிகள், சேவைகள் புதிய விருந்தினர்களையும் பார்வையாளர்களையும் மீண்டும் மீண்டும் ஸ்ரீலங்காவுக்கு வரத்தூண்டும் வகையில் மிகவும் மகிழ்ச்சியடையச் செய்து வருகிறது. நாட்டிலேயே மிகவும் பெரிதுமான, வசதியானதுமான விளையாட்டு சேவையை வழங்கும் ‘பல்லாஜியோ கொழும்பு’, பல்வேறு விளையாட்டுக்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.



இங்கு, தினசரி பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், கலாச்சார நடனங்கள், கேளிக்கை இரவுகள் என ஆண்டுமுழுவதும் இங்கு வரும் விருந்தினர்களை உற்சாகப்படுத்துவதற்கான நிகழ்வுகள் தொடர்கின்றன.

இங்கு விளையாட்டுக்களுக்கும் பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் எவ்விதமான கட்டுப்பாடும் அளவுகோலும் வரையறுக்கப்படுவதில்லை. 

அதிகாரப்பூர்வமான விமான நிறுவனம்:- 

உலக அளவிலான விமான சேவையில் தனது சிறப்பான சேவையை வழங்கிவரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், கடந்த ஜூலை மாதம் முதல் தென்னிந்திய நகரங்களான ஹைதராபாத், கோவை மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களுக்கு தனது விமான சேவையை விரிவுபடுத்தியுள்ளது.



இதற்குமுன்னர், சென்னையில் இருந்து 35 விமானங்கள் கொழும்புவிற்கு ஒவ்வொரு வாரமும் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தற்போதைய விரிவுபடுத்தப்பட்ட விமான சேவையின் மூலமாக இந்தியர்களுக்கும் இலங்கைவாசிகளுக்கும் இடையேயுள்ள மகிழ்ச்சியான உறவுப்பாலம் மேலும் வலுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...